Wednesday, June 15, 2011

'அந்த' நேரத்தில் என்ன நினைப்போ?

Sex
ஒவ்வொருவருக்கும் 'ஆப்சென்ஸ் ஆப் மைன்ட்' இருப்பது சாதாரண விஷயம். ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் மனது அந்த வேலையிலிருந்து டக்கென விலகி வேறொன்றில் மூழ்கி விடும்.

இது செக்ஸ் உறவின்போது கூட நிகழ்கிறது. செக்ஸ் உறவில் ஈடுபட்டிருக்கும்போது ஒவ்வொருவரின் மனதிலும் அதைத் தவிர வேறு சில மன ஓட்டங்களும் இருக்கிறதாம். குறிப்பாக பெண்களுக்கு அது சற்று கூடுதலாகவே இருக்குமாம்.

இதுகுறித்து ஒரு கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளனர் இங்கிலாந்து ஆய்வாளர்கள். நீங்கள் செக்ஸ் உறவில் ஈடுபட்டிருக்கும்போது எந்த நினைவில் இருப்பீர்கள் என்று பெண்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் சொன்ன பதிலில் சுவாரஸ்யமான பல விஷயங்கள் கிடைத்துள்ளன.

34 வயது பெண் ஒருவர் கூறுகையில், எனது தோழிகள் பலரும், அவர்கள் செக்ஸ் உறவில் ஈடுபட்டிருக்கும்போது எந்த நினைவில் இருப்பார்கள் என்பதைக் கூறுவது வழக்கம். சிலர் இதை முடித்து விட்டு அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிப்பார்களாம். சிலரோ, துணிகளை துவைக்க வேண்டியது குறித்து நினைத்துக் கொண்டிருப்பார்களாம். இன்னும் சிலர் மளிகை சாமான்கள் வாங்குவது குறித்து சிந்திப்பார்களாம்.

சில பெண்களுக்கு மனதில் தாங்கள் வரித்து வைத்துள்ள ஆண்களின் நினைவுகள் வந்து போகுமாம். இதுகுறித்து ஒரு பெண் கூறுகையில், நான் எனது கணவரை மிகவும் நேசிக்கிறேன். இருப்பினும் உறவின்போது அவரைத் தவிர வேறு சில ஆண்களும் கூட எனது மனதில் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை. அவர்கள் நான் சிறு வயது முதல் பார்த்து, நேசித்தவர்கள். இதனால் அவர்கள் எனது மனதில் வந்து போகிறார்கள். இருந்தாலும் அவர்களை நான் நேரில் பார்த்தது கிடையாது என்றார்.

51 வயதான ஒரு பெண் கூறுகையில், எனக்கு இரண்டு முறை கல்யாணமாகியுள்ளது. நிறைய காதலர்களும் இருந்தார்கள். நான் படுக்கையில் இருக்கும்போது அந்தக் காதலர்களின் நினைவு வருவது வழக்கம். அதேபோல டிபார்ட்மென்டல் ஸ்டோருக்குப் போவது குறித்தும் நான் அந்த சமயத்தில் திட்டமிடுவது வழக்கம். மேலும் எனது வீட்டில் எத்தனை ஷூக்கள் உள்ளது என்பதையும் நான் மனதுக்குள்ளாகவே கணக்கிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளேன் என்கிறார்.

சில பெண்களுக்கு தங்களுக்குப் பிடித்த சினிமா ஸ்டார்களின் நினைவு வருமாம்.

இது இங்கிலாந்துக் கணக்காக இருக்கலாம். இருப்பினும் செக்ஸ் உறவின்போது வேறு சில சிந்தனைகளிலும் பெண்கள் மற்றும் ஆண்கள் ஈடுபடுவது சாதாரணம்தான் என்கிறார்கள் மன நல நிபுணர்கள்.

சில நேரங்களில் கணவர்களுடனான உறவு பெண்களுக்குக் கசந்து போக இத்தகைய மாறுபட்ட சிந்தனைகளும் காரணமாகி விடுவதாகவும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

மனதொத்த உறவின் மூலம்தான் ஆணும், பெண்ணும் முழுமையான அன்பையும், இன்பத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும். மாறாக இதுபோன்ற வேறு பாதைகளில் சிந்தனகைள் திரும்பும்போது அது கசப்பான விளைவுகளுக்கான ஆரம்ப கட்டமாகவே கருதப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

புத்துணர்ச்சியுடன் இருக்க முத்தமிடுங்கள்!

Kiss
Ads by Google
Band Baaja Baraat Movie
Watch Full Length Movies on YouTube Box Office. Absolutely Free!
www.YouTube.com/BandBaajaBaraat
‘முத்தம் என்பது உப்புத் தண்ணீர் போல குடிக்க குடிக்க தாகம் அதிகமாகும்’ என்று சீனாவில் ஒரு சுவாரஸ்யமான பழமொழி உண்டு. அன்பின் அடையாளமாக திகழும் முத்தம் பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே முன்பு இருந்தது. இப்போது நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.

முதல்முறை முத்தம் பெறும்போதோ அல்லது வழங்கும்போதோ மிக பரபரப்பாகத்தான் இருக்கும். ஆனால் அந்த பரபரப்பான கணங்கள் நம் வாழ்நாள் முழுதும் இனிதான நிகழ்வாக இருக்கும் என்பதை அனைவராலும் மறுக்க முடியாது.

முத்தம் என்பது ஒரு தனி கலை. தனி நபர்களின் மொழி. ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு கருவி. இந்த கருவியை சரியாக கையாளத் தெரிந்தவர்கள்தான் காதல் வாழ்க்கையில் மன்னர்களாக முடிசூட்டிக்கொள்கின்றனர்.

முத்தம் பற்றி ஆதிமுதல் அந்தம் வரைக்கும் பலரும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முத்தத்தினால் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் உடலின் பல்வேறு நோய்களை குணப்படுத்துவதாக உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முத்தம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்காக

மகிழ்ச்சிக்கான அளவுகோல்

தம்பதிகள் இடையேயான நீண்டகால உறவு பலமாக இருப்பதற்கு அவர்களுக்குள் நடைபெறும் முத்த பரிமாற்றமும் ஒரு முக்கிய காரணம். தம்பதியர் இடையே இணக்கமான உறவு இருக்க வேண்டுமானால் அவர்களும் அடிக்கடி முத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டும்.

தங்கள் வாழ்க்கைத்துணையுடன் முத்தத்தை பகிர்ந்து கொள்வதை வாழ்க்கையின் ஒரு அங்கமாக பெண்கள் கருதுகின்றனர். தங்களின் அன்பையும், மகிழ்ச்சியையும் முத்தத்தின் மூலமே பெண்கள் வெளிப்படுத்துகின்றனர்.

உடலுக்கு புத்துணர்ச்சி

ஒருவரையொருவர் கட்டி அணைத்துக் கொண்டு தரும் முத்தத்தினால் உடலில் ஹார்மோன் சுரப்பது அதிகரித்து உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சி கிடைக்கிறது. முத்தம் பெறுபவருக்கு மட்டுமல்லாமல் தருபவருக்கும் இன்பதை அளிக்கிறது.

நீங்கள் உடல் நலத்தோடும், புத்துணர்ச்சியோடும், எதிலும் வெற்றியுடனும் வாழ விரும்பினால் தினமும் வீட்டில் இருந்து கிளம்பும்போது உங்களது வாழ்க்கைத் துணைக்கு முத்தமளித்துவிட்டு கிளம்புங்கள். அப்புறம் பாருங்கள் உங்களது நாள் இனிய நாளாக மட்டுமல்ல வெற்றிகள் கிட்டும் நாளாகவும் அமையும்.

இளமை தோற்றம் அதிகரிக்கும்

நீண்ட முத்தத்தினால் உங்கள் உடலில் தேவையற்ற காலோரிகள் அழிகின்றன. இதனால் உங்கள் உடலை எப்போதும் கச்சிதமாக வைத்துக் கொள்ளலாம். பிரெஞ்ச் முத்தத்தினால் உங்கள் வாய் தசைகளுக்கும், கன்னத்திற்கும் எளிதான உடற்பயிற்சி கிடைக்கிறது. இதனால் உங்கள் முகம் எப்போதும் இளமையான தோற்றத்துடன் இருக்கும்.

அன்பானவர் அளிக்கும் எதிர்பாராத முத்தத்தினால் உங்கள் இதயம் படபடக்கும். அப்போது அதிகமான ரத்தம் உடலுக்குப் பாயும். அப்போது எல்லா நரம்புகளும் வேலை செய்து உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.

கண்களை மூடிக் கொண்டு மூச்சை நிறுத்தி முத்தம் கொடுப்பதன் மூலம் கண்களுக்கும், இதயத்திற்கும் நல்ல உடற்பயிற்சியாகவும் அமைகிறது. டென்ஷனையும் குறைக்கிறது. எனவே நீங்கள் டென்ஷனாக இருக்கும்போது கிடைக்கும் முத்தத்திற்கு மதிப்பு அதிகம்.

முத்தத்தில் கலக்கும் பெண்கள்

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதுபோல், முத்தம் கொடுப்பதும், பெறுவதும் நாளடைவில் ஆண்களுக்கு சலித்து போய்விடுவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், பெண்கள் மட்டும் அதற்கு நேர்எதிராக இருக்கிறார்கள்.

முத்தத்தை புத்துணர்வு தரும் விஷயமாக அவர்கள் கருதுவதுதான் அதற்கு காரணம். முத்தம் விஷயத்தில் ஆண்கள் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் முத்த இன்பத்தை அணுஅணுவாய் ரசிப்பதிலும் கொடுப்பதிலும் பெண்கள்தான் `டாப்.’

தாம்பத்ய உறவில், தன் துணையை பலவாறு முத்தமிடுவதன் மூலமே அந்த உறவில் ஒரு திருப்தியான நிறைவை பெண்கள் பெறுகின்றனராம் இப்படி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அள்ளித் தந்து இருக்கிறது, அமெரிக்க ஆய்வு ஒன்று.

ஆனால், நம் நாட்டுப் பெண்கள் எப்படி…? அது ரகசியம்!

காலையில் எழுந்ததும் 'பசிக்கிறதா'?

காலையில் எழுந்ததும் 'பசிக்கிறதா'?

Morning sex
வெளியில் சூரியனின் வருகை, தூரத்தில் கொக்கரக்கோ சத்தம், ஜன்னல் வழியாக ஊடுறுவி வரும் மென்மையான வெளிச்சம், ஜன்னலைத் திறக்கும்போது லேசான இதமான காற்று, படுக்கை அறையில் பரவசமான நிலையில் உங்களது துணை, அவரது அமைதியாக மூடியிருக்கும் கண்கள், லேசாக திறந்தபடி காணப்படும் வாய், உடைகள் கலைந்து போயிருக்கும் அந்த கோலம், அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் அழகு, யாராக இருந்தாலும் சத்தமின்றி ரசிக்க வைக்கும்.

இப்படிப்பட்ட அழகைப் பார்க்கும் பெரும்பாலானோருக்கு ஆழமாக அவர்களை ரசிக்கத் தூண்டும். அதில் பலருக்கும் தோன்றும் உணர்வு - இப்போது உறவு வைத்துக் கொண்டால் என்ன என்பதுதான்.

ஆண்களில் பெரும்பாலானோருக்கும் இந்த காலை நேர 'பசி' உணர்வு எழுவது சகஜம். அதேசமயம், பெண்களுக்கு அந்த உறவில் பெரும்பாலும் நாட்டம் ஏற்படுவதில்லை.

செக்ஸ் விஷயத்தில், ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி உறவு கொள்வது என்பதில் தனித் தனி கருத்துக்கள் இருக்கின்றன.

பெண்களைப் பொறுத்தவரை இரவு நேரம்தான் உறவுக்கு உகந்ததாக கருதுகிறார்கள் -பெரும்பாலும். ஆண்களோ இரவையும் விரும்புகிறார்கள், காலை நேர உறவையும் விரும்புகிறார்கள்.

ஆண்களைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது உணர்வுப்பூர்வமானது என்பதை விட உடல் ரீதியான ஒரு தேவையாகவே பெரும்பாலும் உள்ளது. எப்போதெல்லாம் ஆண்களின் உடலும், மனமும் நிதானமாக, ரிலாக்ஸ்டாக இருக்கிறதோ அப்போதெல்லாம் செக்ஸ் உணர்வுகள் தூண்டப்படுகிறது. அதிலும் துணை வெகு அருகே இருக்கும்போது செக்ஸ் உணர்வுகள் வேகமாகவே தூண்டப்படும். இதுதான் காலையில் எழுந்திருத்ததும் அவர்களுக்குப் 'பசி' எடுக்க முக்கியக் காரணம்.

ஆனால் பெண்களைப் பொறுத்தவரை, செக்ஸ் என்பது உணர்வுப்பூர்வமாகவே தூண்டப்படுகிறது. தனது துணையைப் பார்த்ததும் பெண்கள் செக்ஸ் ரீதியாக தூண்டப்படுவதில்லை. மாறாக உணர்வுகள் தூண்டப்பட்டால் மட்டுமே அவர்கள் 'சாப்பிடத்' தயாராவார்கள். இதுதான் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உள்ள ஒரு வித்தியாசம்.

சரி, இரவில் மட்டும் பெண்கள் உறவுக்கு விரும்புவதும், காலையில் விரும்பாததற்கும் என்ன காரணம்?

இந்தியாவைப் பொறுத்தவரை, தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலை பார்க்கிறார்கள், பிசியாக இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், ஆண்களை விட பெண்களுக்குத்தான் இன்று நிறைய சுமைகள். குடும்பத்தைக் கவனிப்பது, வேலைக்குச் செல்வது, வீட்டு வேலைகளைச் செய்வது, குழந்தைப் பராமரிப்பு என ஏகப்பட்ட பணிகளை அவர்களது மென்மையான தோள்களில் சுமத்தி விட்டது சமுதாயம்.

எனவே பெண்களுக்கு வழக்கத்தை விட வேலைப்பளு, மன ரீதியான டென்ஷன் அதிகமாகி விட்டது. எப்போதும் ஏதாவது ஒரு வேலை குறித்த சிந்தனையில் பெண்களின் மனம் உழன்று கொண்டிருக்கிறது. இதனால் பிரஷர் அதிகமாகவே உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் இரவு உறவுக்கே அவர்கள் பெரும் மெனக்கெட வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் காலையில் உறவு கொள்வது என்பதை அவர்கள் கிட்டத்தட்ட வெறுக்கவே செய்கிறார்கள்.

இன்னொரு விஷயம், ஆண்களைப் பொறுத்தவரை காலையில் உறவு கொண்டு மனதையும், உடலையும் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் பகல் முழுவதும் தாங்கள் சந்திக்கப் போகும் வேலைகளையும், சவால்களையும் சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.

அதை விட முக்கியமாக, ஆண்களுக்கு வேலை என்று பெரிதாக எதுவும் இருப்பதில்லை. காலையில் எழுந்திருத்து, குளித்து, சாப்பிட்டு விட்டு அலுவலகம் செல்வது, பகல் நேரத்தை வேலையில் கழிப்பது, மாலையில் மீண்டும் திரும்பி விடுவது என்ற அளவில்தான் அவர்களது வட்டம் உள்ளது. பெரிய பொறுப்பு என்று எதையும் அவர்கள் சுமப்பதில்லை. எனவே நினைக்கும்போது உறவு வைத்துக் கொள்வதில் என்ன தப்பு என்று அவர்கள் கேட்கக் கூடும்.

ஆனால் பெண்கள் அப்படி நினைப்பதில்லை. பகல் நேர சவால்களையும், வேலைகளையும் எப்போதும் போலவே அவர்கள் எதிர்கொள்ள நினைக்கிறார்கள். இதை சரியாகச் செய்ய செக்ஸ் தேவை என்று அவர்கள் நினைப்பதில்லை. சவால்கள் எப்போதுமே ஒன்றுதான் அதை எதிர்கொள்ள மன ரீதியான, புத்தி ரீதியான பலம்தான் அவசியம், செக்ஸ் என்ற மருந்து தேவையில்லை என்பது அவர்களது சிந்தனை.

மேலும், ஒரு வேலை பார்க்கும் பெண்ணாக இருந்தால், காலையில் எழுந்தது முதல் அலுவலகத்திற்குச் செல்வது வரை ஏகப்பட்ட வேலைகள் வரிசை கட்டிக் காத்திருக்கும். சமையல் செய்வது, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, கணவரை வேலைக்கு அனுப்புவது, தானும் வேலைக்குச் செல்லத் தயாராவது, வீட்டில் பெரியவர்கள் இருந்து விட்டால் அவர்களைக் கவனிப்பது என்று உட்காரக் கூட நேரம் இல்லாமல் ஓட வேண்டிய கட்டாயம் இன்றைய பெண்கள் பெரும்பாலானோருக்கு உள்ளது.

இன்றைய சமுதாயத்தில் மனைவியருக்கு உதவும் கணவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். கர்ச்சீப்பை எடுத்துக் கொடுக்கக் கூட மனைவியைத் தேடுவோர் நிறையப் பேர் உண்டு. இப்படிப்பட்ட பிசியான ஷெட்யூலில் காலையில் எங்கே போய் உறவு கொள்வது? இதுதான் பெண்கள் காலை நேர 'சடுகுடு'வை விரும்பாததற்கு இன்னொரு முக்கியக் காரணம்.

இருப்பினும் காலை நேர செக்ஸ் நல்ல 'ஐடியா'தான் என்கிறார்கள் மன நல மருத்துவர்கள். நல்லதொரு இரவுத் தூக்கத்தை மேற்கொள்பவர்களுக்கு காலையில் உடலும், மனமும் பிரஷ்ஷாக இருக்கும். உடலில் வளர்ச்சி ஹார்மோன்கள் தூண்டப்படும். உடலும் நல்ல வலுவுடன் இருக்கும். இதனால் காலை நேரத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது அது நிச்சயம் சிறப்பாகவே இருக்கும். அதேசமயம், பெண்களும் நல்ல மூடில் இருக்கும்போது மட்டுமே ஆண்கள் காலை நேர உறவுக்கு முயற்சிக்கலாம். மாறாக வற்புறுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்கிறார்கள்.

எந்த நேரமாக இருந்தால் என்ன, உறவுக்கு மிக மிக முக்கியம் மென்மையான அணுகுமுறைதான். காலையாக இருந்தாலும் சரி, இரவாக இருந்தாலும் சரி அந்த உறவை, அன்புப் பரிமாற்றமாக, அணுசரணையான நிகழ்வாக, காதலுடன் கூடியதாக மாற்றிக் கொள்வதே சாலச் சிறந்தது, காலத்திற்கும் நிலைத்திருக்கக் கூடிய உறவுக்கு வழிவகுக்கக் கூடியது என்பதை இருவருமே மறக்கக் கூடாது.

காலையில் எழுந்ததும் கண்களில் ஒரு முத்தம், நெற்றிப் பொட்டில் ஒரு சின்ன 'இச்', காது மடல்களில் உதடுகளால் ஒரு வருடல், உதடுகளில் தென்றல் பூவைத் தீண்டுவது போல வலிக்காமல் ஒரு முத்தமிட்டு, குட்மார்னிங் சொல்லி உங்களது மனைவியை எழுப்பிப் பாருங்கள், செக்ஸ் உறவை விட அது ஆழமாக அவரது மனதைத் தொடும்.

உடல்களின் உறவை விட உள்ளங்களின் நெருங்கிய உறவுதான் இல்லறத்தில் மிக மிக முக்கியமானது, இல்லையா...?